கேட்ட அலறல்... குழந்தைகளுடன் ஆற்றுக்குள் பாய்ந்த பள்ளி மினி பஸ் - உள்ளே குதித்து உயிர்களை மீட்ட ஹீரோக்கள்... திக் திக் காட்சி

Update: 2024-10-23 13:09 GMT

சத்தீஸ்கரில்,குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சக்தி மாவட்டத்தில் இன்று காலை குழந்தைகள் 15 பேரை ஏற்றிக் கொண்டு பள்ளி மினி பேருந்து சென்று கொண்டிருந்தது. சாலை குறுகலாக இருந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது சோன் ஆற்றில் உருண்டு விழுந்தது. அப்போது குழந்தைகள் மத்தியில் அலறல் சத்தம் கேட்டு கூடிய கிராம மக்கள், ஓடி வந்து அனைத்து குழந்தைகளையும் பேருந்துக்குள் இருந்து பத்திரமாக வெளியே மீட்டனர்.

பேருந்து முழுவதுமாக தண்ணீரில் முழுங்கியது அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்