மூன்று நாட்கள் மதுபான கடைகள் அடைப்பு.. புதுச்சேரி கலால்துறை அதிரடி உத்தரவு

Update: 2024-07-09 02:14 GMT

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி எல்லை பகுதியில் உள்ள மதுபான கடைகளை அடைக்க, புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு - புதுச்சேரி எல்லையில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட அனைத்து வகை மதுபான கடைகளும் அடைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று முதல் தேர்தல் நடைபெறும் நாளான நாளை வரை, மூன்று நாட்களுக்கு இப்பகுதியில் உள்ள மதுபான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 13ஆம் தேதியும், இதே போன்று மதுபானக்கடைகள் அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்