வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி.. தரதரவென இழுத்துச் சென்ற சிறுத்தை

Update: 2023-09-03 10:33 GMT

ஜம்மு-காஷ்மீர் அருகே உதம்பூரில், 4 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், வனத்துறையினர் தீவிர தேடுத்ல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

உதம்பூர் பகுதியில், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை, சிறுத்தை இழுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, வனத்துறையினர் அப்பகுதியில், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2021ம் ஆண்டில் இதே பகுதியில், 4 வயது சிறுமி, சிறுத்தையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். தற்போது, மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே, சிறார்கள், பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் அதிகாலை, மாலை நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்