தன் மனைவியின் ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட கணவன்... மொத்த சோசியல் மீடியாவும் பரபரப்பில்

Update: 2024-10-10 08:55 GMT

லஞ்சம் வாங்கிய மனைவியை, கணவர் வீடியோ ஆதாரத்துடன் இணையத்தில் அம்பலப்படுத்தி போலீசில் சிக்க வைத்த சம்பவம் வைரலாகி வருகிறது. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

லஞ்சம், லஞ்சம், லஞ்சம்.. எங்கு பார்த்தாலும் லஞ்சம் என இந்தியன் தாத்தாவாக வெகுண்டெழுந்த நபர் ஒருவர், லஞ்சம் வாங்கிய தன் மனைவியையே கையும் களவுமாக போலீசில் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

தெலங்கானாவின் ஹைதராபாத்தில்தான் இந்த சம்பவம்...

ஹைதராபாத் மாநகராட்சியில் துணை எக்ஸிகியூடிவ் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர்தான் இந்த திவ்ய ஜோதி...

இவர், தன் பணியில் லஞ்சம் மேல் லஞ்சம் வாங்கி வீடு, பங்களா என சொத்துக்களை குவித்ததாக கூறப்படுகிறது...

இதையறிந்த கணவர் ஸ்வர்ணா ஸ்ரீபத், திவ்ய ஜோதியை தொடர்ந்து கண்டித்து, லஞ்சம் வாங்குவதை தவிர்க்குமாறு எச்சரித்துள்ளார்...

ஆனால், இதனை திவ்ய பாரதி காதில் வாங்கி கொள்ளவில்லை....

இந்நிலையில், இந்தியன் தாத்தாவாக வெகுண்டெழுந்த கணவர், வீட்டின் பூஜையறையிலும், படுக்கை அறையிலும் மனைவி பதுக்கி வைத்திருந்த லஞ்சப் பணம் 30 லட்ச ரூபாயை வீடியோ எடுத்து இந்தியன் தாத்தா போல இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்...

சினிமாவை மிஞ்சும் பாணியில், பொதுமக்கள் கமெண்ட்களை தெறிக்க விட்டு இந்த வீடியோவை வைரலாக்க , விவகாரம் பூதாகரமாகி இருக்கிறது..

உடனே, ஹைதராபாத் மாநகராட்சியில் இருந்து திவ்யா பாரதியை பணிமாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில், சம்பவம் போலீஸ் கைக்கு மாறி அதிரடியாக விசாரணையும் நடந்து வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்