28,426 வழக்குகள் பதிவு... அதிர்ச்சி புள்ளி விவரம் | kerala

Update: 2024-10-10 10:09 GMT

28,426 வழக்குகள் பதிவு... அதிர்ச்சி புள்ளி விவரம்

கேரளாவில் போதை பொருட்கள் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

கேரளாவில் 2016ஆம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை போதை பொருட்கள் தொடர்பான வழக்குகள் 360 சதவீதம் உயர்ந்துள்ளன. 2023ம் ஆண்டு அங்கு 28 ஆயிரத்து 426 வழக்குகள் பதிவாகி உள்ளன.

2021ம் ஆண்டு 25 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் கைதாகி உள்ளனர். 2022ம் ஆண்டு 27 ஆயிரத்து 545 பேர் கைதாகி உள்ளனர்.

கேரளா முழுவதும் பதிவாகும் போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் முதலிடத்தில் கொச்சி இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் கொச்சியில் 137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 153 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 526 ஆம்பெட்டமின் கிலோ, 2 ஆயிரத்து 807 கிலோ கஞ்சா, 6 கிலோ ஹாஷிஷ் ஆயில், சுமார் 14 கிலோ எம்டிஎம்ஏ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்