விலகிய நீதிபதிகள்..சந்திரபாபு நாயுடு வழக்கு உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு

Update: 2023-09-28 04:01 GMT

திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதிகள் திடீரென விலகியுள்ளனர். தன் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்யக்கோரி தாக்கல்செய்த மனுவை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்நிலையில், நீதிபதிகள் விலகுவதாக அறிவித்த்தால், மனுவை வேறு அமர்வு விசாரிக்கும் வகையில், அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்