பாம்பு கடித்தவரை பார்த்ததும் உயிர் பயத்தில் அலறி ஓடிய டாக்டர்

Update: 2024-09-20 05:36 GMT

தார்வாட் மாவட்டத்தில் உள்ள இங்கலகி கிராமத்தை சேர்ந்த ஈரப்பாவும், அவருடைய மகன் பக்கீரப்பாவும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, பக்கீரப்பாவை பச்சைப் பாம்பு கடித்தது. இதையடுத்து அவர், அந்த பாம்பை அடித்துக் கொன்று, பையில் எடுத்துக் கொண்டு ஹூப்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். மருத்துவர் சிகிச்சை அளிக்கத் தயாரானபோது, பக்கீரப்பா பையில் இருந்து இறந்த பாம்பை வெளியே எடுத்துக் காட்டியதால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர், அலறியடித்துக் கொண்டு ஓட முயன்றார்.

இதையடுத்து, இறந்த பாம்பை கொண்டு வந்ததாக பக்கீரப்பா கூறியதால், அதை வெளியே எடுத்துச் செல்லுமாறு கூறிய மருத்துவர், பின்னர் பக்கீரப்பாவுக்கு சிகிச்சை அளித்தார். பக்கீரப்பாவை பச்சைப் பாம்பு கடித்த நிலையில், அவருடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்