கேலி கூத்தாக மாறிய பஸ் ஸ்டாப்.. சிரிக்கவா.. அழவா? - குழம்பிய மக்கள்

Update: 2024-10-23 05:08 GMT

கேலி கூத்தாக மாறிய பஸ் ஸ்டாப்.. சிரிக்கவா.. அழவா? - குழம்பிய மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள பேருந்து நிழற்கூடம் ஒன்று, பொதுமக்களுக்கு வேடிக்கை பொருளாகியுள்ளது. ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கர்னூர் பகுதியில் உள்ள பேருந்து நிழற்கூடம், மூன்றரை அடி உயரத்தில் உள்ளது. நிழற்கூடத்தின் தரைத்தளத்தை உயர்த்தியதே இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிழற்கூடத்திற்குள் தரையில் அமரலாம்... குத்தவைத்து உட்காரலாம் அல்லது படுக்கலாம்... ஆனால் நிற்க முடியாது... பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பலரும், பேருந்து நிழற்கூடத்திற்கு வெளியேதான் நிற்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்