கண்ணிமைக்கும் நேரத்தில் வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்த கார் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-10-07 14:23 GMT

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி, கழிவுநீர் வாய்க்காலில் தலைகீழாக விழுந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வயநாட்டில் இருந்து மலப்புரம் நோக்கி சென்ற அந்த கார், தாமரைச்சேரி அடிவாரம் பகுதியில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் வந்த 6 பேரும் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்