ஜம்மு, காஷ்மீரை சுத்துப்போட்ட பனிமூட்டம் - எதிரே காத்திருக்கும் அபாயம்..!

Update: 2023-11-20 16:00 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மூன்றாவது நாளாக அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. ஸ்ரீநகரில் அதிகபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், நகர் பகுதி முழுவதும் பனி படர்ந்திருந்தது. குறிப்பாக சுமார் 50 மீட்டருக்கு அப்பால் இருப்பது என்ன என்பது கூட தெரியாத அளவிற்கு கடும் மூடுபனி நிலவியது. நவம்பர் 26 ஆம் தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என ஸ்ரீநகர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்