காரில் பை பையாய்.. ரகசியத் தகவல் - ரூ.300 கோடி கோக்கைன் பறிமுதல் | jammu kashmir

Update: 2023-10-02 01:47 GMT

ஜம்மு-காஷ்மீரில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஒரு வாகனத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் 30 கிலோ கோகைன் போதைப்பொருள் மறைத்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அதைக் கொண்டு வந்த 2 பேரை கைது செய்தனர். சர்வதேச கள்ளச் சந்தையில், இந்த போதைப்பொருளின் மதிப்பு 300 கோடி ரூபாய் இருக்கும் என்று காவல் துறை அதிகாரி மோஹிதா சர்மா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்