அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஷாக் கொடுத்த டெல்லி ஐகோர்ட்

Update: 2024-07-01 10:31 GMT

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைதுக்கும், 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதற்கும் எதிராக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளாார்.

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல் நிறைவடைவதை தொடர்ந்து, அவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனேனா சர்மா முன் 29ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார்.

அர்விந்த் கெஜ்ரிவாலை ௧௪ நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்