இனி "அந்த" விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்" - அக்‌ஷய் குமார் ரசிகர்களிடம் உறுதி

ரசிகர்களின் விமர்சனத்தை தொடர்ந்து பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதை கைவிடுவதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-21 08:44 GMT
இனி "அந்த" விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்" - அக்‌ஷய் குமார் ரசிகர்களிடம் உறுதி

ரசிகர்களின் விமர்சனத்தை தொடர்ந்து பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதை கைவிடுவதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வரும் அக்‌ஷய் குமார், விமல் என்ற குட்கா நிறுவனத்தின் 'பான் மசாலா' விளம்பரத்தில் நடித்திருந்தார். அவருடன் சேர்ந்து ஷாருக் கானும், அஜய் தேவ்கானும் நடித்திருந்தனர். புகையிலை விளம்பரத்தில் நடித்ததற்காக அக்‌ஷய் குமார் மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால், பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதை கைவிடும் முடிவை அக்‌ஷய் குமார் எடுத்துள்ளார். ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புகையிலை விளம்பரத்தில் நடிப்பதை கைவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்