கர்நாடகாவில் சர்ச்சைக்குரிய தகவல் பகிர்ந்ததால் வெடித்த வன்முறை

கர்நாடக மாநிலம் ஹூப்ளி வன்முறை சம்பவத்தில் தொடர்புடையதாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-18 07:52 GMT
கர்நாடக மாநிலம் ஹூப்ளி வன்முறை சம்பவத்தில் தொடர்புடையதாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாவின் ஹூப்ளியில் ராம் என்பவர் இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை தகவலை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எனினும், சர்ச்சை தகவல் வெளியிட்ட நபரை கண்டித்து ஹூப்ளி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் கற்கள் வீசப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் 12 பேர் காயமடைந்ததால் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்