நடிகை கடத்தல் வழக்கு - விசாரணைக்கு ஆஜராக காவ்யா மாதவன் மறுப்பு!

கேரளாவில் பிரபல நடிகை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு, நேரில் ஆஜராக நடிகை காவ்யா மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-11 03:05 GMT
நடிகை கடத்தல் வழக்கு - விசாரணைக்கு ஆஜராக காவ்யா மாதவன் மறுப்பு!

கேரளாவில் பிரபல நடிகை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு, நேரில் ஆஜராக நடிகை காவ்யா மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார். கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், நடிகை காவ்யா மாதவனுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து அவரை விசாரணை செய்வதற்காக குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதற்கு இன்றைய தினம், தன்னால் ஆஜராக முடியாது எனவும், மற்றொரு நாள் விசாரணை மேற்கொள்ளுமாறும், காவ்யா மாதவன் கடிதம் மூலம் பதில் அனுப்பியுள்ளார். வரும் புதன்கிழமை கொச்சியில் உள்ள தனது வீட்டிலேயே, அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளலாம் எனவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்