இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை..நிகழ்த்தப்பட்ட சோதனை வெற்றி

வான்வழி பாதுகாப்பை உறுதி செய்யும் ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

Update: 2022-03-27 10:49 GMT
வான்வழி பாதுகாப்பை உறுதி செய்யும் ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. எதிரிகளின் நடுத்தர அளவிலான வான்வழி தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏவுகணையின் சோதனை ஒடிசாவின் பலாசோர் கடல்பகுதியில் நிகழ்த்தப்பட்டது. இதில் மிக தொலையில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி ஏவுகணை அழித்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர் சோனிக் போர் கப்பலின் ஏவுகணை சோதனை கடந்த வாரம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்