5 ஆண்டில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி - டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உறுதி

வளர்ந்த நாடுகளைப் போல தலைநகர் டெல்லியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் விரைவில் உறுதி செய்யப்படும் என்று, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-26 10:19 GMT
வளர்ந்த நாடுகளைப் போல தலைநகர் டெல்லியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் விரைவில் உறுதி செய்யப்படும் என்று, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் காணொலி வாயிலாக அளித்த பேட்டியில், டெல்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வது, குடிநீர் வீணாவதை தடுப்பது தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்படும் என்றார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் டெல்லியில் 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை அளித்து சாதனை புரிவோம் என்றும், குடிநீர் தேவைக்கு உரிய தண்ணீரை வழங்க  உத்தர பிரதேசம், உத்தராகண்ட், இமாசலப் பிரதேசம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.  குடிநீர் விநியோகம் தனியார் மயமாகாது என்றும் முதலமைச்சர் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்