உன்னாவ்வில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை : போலீசார் துப்பாக்கிக் சூடு நடத்தியதால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ்வில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-16 13:20 GMT
உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ்வில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநில அரசு, கங்கை நீர் திட்டத்திற்காக, விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தியது. இ​தற்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என கோரி, விவசாயிகள் உன்னாவ்வில், போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், போலீசார் மீது, தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக போலீசாரும், துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்