உன்னாவ்வில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை : போலீசார் துப்பாக்கிக் சூடு நடத்தியதால் பரபரப்பு
உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ்வில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ்வில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநில அரசு, கங்கை நீர் திட்டத்திற்காக, விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தியது. இதற்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என கோரி, விவசாயிகள் உன்னாவ்வில், போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், போலீசார் மீது, தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக போலீசாரும், துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.