இளம் நடிகை சொன்ன அடுத்த பகீர் தகவல்... ஷாக்கில் பிரபல நடிகர், இயக்குநர்

Update: 2024-08-27 10:43 GMT

நடிகர் பாபுராஜ், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது இளம் நடிகை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது கேரள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில் இயங்கிவரும் இளம் நடிகை ஒருவர் முன் வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து கேரளா அரசு அமைத்துள்ள சிறப்பு குழு விசாரித்து வருகிறது. அந்த நடிகையை தொடர்பு கொண்டு எழுத்துமூலம் புகார் அளிக்கும்படி சிறப்பு குழு அறிவுறுத்தியுள்ளது. கேரள மாநிலத்திற்கு வெளியே தங்கி இருப்பதால் உடனடியாக நேரடியாக வந்து புகார் அளிக்க முடியாது எனக் கூறிய நடிகை, இமெயில் மூலம் நடிகர் பாபுராஜ், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது காவல்துறைக்கு புகார் அனுப்பியுள்ளார். மேலும், தேவைப்பட்டால் நேரில் வந்து வாக்குமூலம் அளிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு எதிரான கூட்டுச் சதி எனவும் கேரள திரையுலகை சேர்ந்தவர்களே இந்த நடிகையை பின்னால் இருந்து இயக்குவதாக நடிகர் பாபுராஜ் கூறியுள்ளார். இதனை மறுத்துள்ள நடிகை, தன்னை யாரும் இயக்கவில்லை எனவும் தானாக முன்வந்து, தனக்கு நேர்ந்த சம்பவத்தை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்