"அந்தப் பெண்ணை தொடர்புபடுத்துவது தேவையற்றது" - "உண்மை ஒருநாள் வெளிவரும்" - கொந்தளித்த ஜெயம் ரவி

Update: 2024-09-21 12:00 GMT

என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசுவது நாகரிகமற்ற செயல் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி மனைவியைப் பிரிய பாடகி ஒருவர்தான் காரணம் என இணையத்தில் செய்திகள் பரவியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள ஜெயம் ரவி, விவாகரத்து குறித்து இரண்டு முறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் தனக்குத் தெரியாமல் எடுத்த முடிவு என்று அவர் சொல்வது அதிர்ச்சியாக இருக் கிறது எனவும் தெரிவித்துள்ளார். இத்தனை வருட சினிமா வாழ்வில் எந்த கிசு கிசுவும் வராமல் இருந்தவன் நான் எனக் குறிப்பிட்டுள்ள ஜெயம் ரவி, என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்துப் பேசுவது தவறானது எனக் கூறியுள்ளார். ஆதரவற்ற அந்தப் பெண், பலருக்கும் உதவி செய்யும் சூழலில், அவரை இதில் தொடர்பு படுத்துவது தேவையற்றது என விளக்கம் அளித்துள்ளார். மேலும், உண்மை ஒருநாள் நீதிமன்றம் மூலம் வெளிவரும் என‌ ஜெயம் ரவி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்