“என் நண்பன் பாலுவின் நினைவாக”... இளையராஜா போட்ட ட்வீட்

Update: 2024-09-27 02:56 GMT

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த பகுதியில் உள்ள சாலைக்கு, அவரது பெயரையே சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு இசை அமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பிறந்த தினத்தை ஒட்டி, அவர் வாழ்ந்த காம்தார் நகரின் சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என தமிழ்நாடு அரசு பெயரிட்டது. இதனை வரவேற்றுள்ள இளையராஜா, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நெகிழ்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்