நடிகர் முகேஷுக்கு முன் ஜாமின் வழங்கிய வழக்கு.. கேரள அரசு எடுத்த முடிவு

Update: 2024-09-09 10:21 GMT

பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷுக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுளதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில்லை என கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரளா மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த நடிகை ஒருவர் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் மலையாள நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷ் மீது கொச்சி மரடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இபிகோ 354, 509 மற்றும் 452 ஆகிய பிரிவுகளில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகர் முகேஷ் முன்ஜாமீன் கோரி எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம், புகார்தாரரின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக கூறி முகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கி

உத்தரவிட்டது.

இந்நிலையில் பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் எம்எல்ஏவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்வதில்லை என கேரள அரசு முடிவு செய்துள்ளது.

முகேஷ் வழக்கில் மேல்முறையீடு செய்யாவிட்டால், இடவேளை பாபுவுக்கு ஜாமீன் வழங்கிய வழக்கில் கேரள அரசு மேல்முறையீடு செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்