மனைவி ஆர்த்தி மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த ஜெயம் ரவி.. ஷாக்கில் ரசிகர்கள் - அதிர்ச்சி காரணம்

Update: 2024-09-25 02:37 GMT

அண்மையில் நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி மனு அளித்திருந்தார். எனினும், இந்த முடிவு ஜெயம் ரவியின் தனிப்பட்ட கருத்து எனவும், தனக்கு இந்த விவகாரம் தொடர்பாக எந்த தகவலும் தெரியாது எனவும் ஆர்த்தி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆர்த்திக்கு இரண்டு முறை விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியதாக ஜெயம் ரவி பதிலளித்திருந்தார். இந்நிலையில், ஆர்த்தி வீட்டில் உள்ள தனக்கு சொந்தமான உடைமைகள், பாஸ்போர்ட், கார் சாவி உள்ளிட்ட பொருள்களை மீட்டு தர கோரி அடையாறு துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை ஜெயம் ரவி அளித்துள்ளார். இந்த புகார் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, போலீசார் தரப்பில் இருந்து சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்