இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு இன்னும் சற்று நேரத்தில் தேநீர் விருந்து..

x

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஒலிம்பிக் குழுவுக்கு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று தேநீர் விருந்து அளிக்கிறார். டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று மாலை 5.30 மணிக்கு தேநீர் விருந்து நடைபெறவுள்ளது. மேலும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில், இந்திய ஒலிம்பிக் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் நாளை மதியம் 1 மணிக்கு, இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அவரது இல்லத்தில் விருந்தளிக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்