டோக்கியோவில் விட்டதை பாரிஸில் பிடித்த மனு பாக்கர் - பிரதமர் மோடி போட்ட ட்வீட்

x

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ள இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கத்தை மனு பாக்கர் வென்று இருப்பதாகவும், இந்தியாவிற்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்