பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை - காலிறுதியில் லவ்லினா தோல்வி

x

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்ஹோஹெய்ன் தோல்வி அடைந்தார். மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை லி கியானுடன் லவ்லினா மோதினார். இதில் 4க்கு 1 என்ற கணக்கில் சீன வீராங்கனை லி கியான் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். தோல்வி அடைந்த லவ்லினா பதக்க வாய்ப்பை இழந்தார். லவ்லினா காலிறுதியில் வெற்றி பெற்று இருந்தால் இந்தியாவிற்கு இன்னொரு பதக்கம் உறுதியாகி இருக்கும். நடப்பு ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தது.


Next Story

மேலும் செய்திகள்