ஒரே ஒரு வாக்கு.. ஓட்டு மெஷினை தடுத்து - கோவை பாஜகவினர் கடும் போராட்டம்

x

கோவை, பிள்ளையப்பம் பாளையம் பகுதியில் இருந்த வாக்குச்சாவடியில் மூதாட்டி ஒருவரின் ஓட்டை, தேர்தல் அலுவலர் தன்னிச்சையாக போட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால், வாக்குப்பதிவு எந்திரத்தை எடுத்து செல்லவிடாமல் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதே போன்று, திண்டுக்கல் மாவட்டம் கோணப்பட்டியில் காலதாமதமாக வந்த பத்து இளைஞர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதாலும், திருவண்ணாமலை மாவட்டம், அல்லியந்தல் ஊராட்சியில் சோலார் பேனல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து செல்லவிடாமல், போராட்டம் நடத்தப்பட்டது. இத்தகையை சூழல்களில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, வாக்குப்பதிவு எந்திரங்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்