#BREAKING || போலீசார் முன்பு மாறி மாறி அடித்து கொண்ட பாஜகவினர்.. கலவரத்தில் முடிந்த தேர்தல் களம்..

x

ஆம்பூரில் பாஜகவின் இரு கோஷ்டிகளுக்கு இடையே கைகலப்பு. போலீசார் முன்னிலையில் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியில் பாஜகவின் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே கடும் மோதல், பூத் இல் நடந்த வாக்குவாதம் முற்றியதில் தேர்தல் முடிந்த பிறகு வாக்குபதிவு மையத்திற்கு வெளியேஒருவருகொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்., சமாதானம் செய்வதற்காக வந்த காவல்துறையினர் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஒரு தரப்பினரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்பினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் மோதல்.


Next Story

மேலும் செய்திகள்