உலகையே உலுக்கி போட்ட இஸ்ரேல் போர் - வெளியான குலைநடுக்க செய்தி

x

காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 42ஆயிரத்து 500ஆக அதிகரித்துள்ளது... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கிட்டத்தட்ட 1 லட்சம் பாலஸ்தீனியர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இன்றுவரை படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களில் 21 பேர் பெண்கள் ஆவர்... மேலும் பலர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ள நிலையில் அவர்கள் நிலை என்ன ஆனது என்பது குறித்துத் தெரியவில்லை.


Next Story

மேலும் செய்திகள்