கடைகளில் திடீர் ரெய்டு - பித்தலாட்டம் பண்ண ஓனர் -அதிகாரி எடுத்த அதிரடி ஆக்சன்

x

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து, அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது, பேக்கரிகளில் காலாவதியான நிலையில் இருந்த 10 கிலோ கேக், நூற்றுக்கும் மேற்பட்ட மிக்சர், பிஸ்கெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், லேபிள் இல்லாமல் விற்கப்பட்ட ஜூஸ் வகைகள், அதிக நிறமூட்டி சேர்க்கப்பட்ட ஐந்து கிலோ கோழி இறைச்சி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்து அழித்தனர். அப்போது, வியாபாரத்தைக் கெடுத்து விட்டு அபராதம் கேட்கிறோர்களா? எனக்கேட்டு, உணவக உரிமையாளர் ஒருவர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். மேலும், அந்த உணவகத்தின் சமையலறையை பூட்டிவிட்டு, சாவி இல்லையெனக் கூறி ஊழியர்கள் காலம் தாழ்த்தியது, அதிகாரிகளை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.


Next Story

மேலும் செய்திகள்