பெண்ணின் மரணத்தில் சந்தேகம் - உறவினர்கள் முற்றுகை

x

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எம்.தண்டா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி பிரியா, மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்