12 அடி உயரம்.. ஒற்றை கையால் அசத்தும் வித்தைகாரர்.. விநாயகர் சதுர்த்தினாலே இவர் தானாம்

x

சுமார் 12 அடி வரையிலான பிள்ளையார் சிலைகளுக்கு, தன் ஒற்றைக்கையால் 22 வருடங்களுக்கும் மேலாக உயிர் கொடுத்து வருகிறார்...

12 அடி சிலை வரை உயிர் கொடுத்து அசத்தும் கலைநயம்

விநாயகர் சுதுர்த்தி திருவிழா நெருங்கி வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள குயவர் தெருவில் பாண்டியராஜனை வலை வீசி தேடி வருகின்றனர் கணேச பக்தர்கள் ...

அவ்வளவு மவுசு இந்த பாண்டியராஜனுக்கு...

திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை என எல்லா இடங்களிலும் இவர் செய்து கொடுக்கும் சிலைகள்தானாம்

பெயரை சொல்லி, தேடி வந்து சிலை வாங்கி செல்லும் மக்கள்

பிறக்கும்போதே, ஒரு கை செயலிழந்து பிறந்த பாண்டியராஜனுக்கு... தான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அவருக்குள் பிறந்த தன்னம்பிக்கை கை கொடுத்திருக்கிறது...

தன் ஒற்றைக்கையால் அப்போது 2 அடி விநாயர் சிலையை செய்ய ஆரம்பித்த பாண்டியராஜன், தற்போது 12 அடி வரையிலான சிலைகள் செய்து 22 வருட சாம்ராஜ்யத்தை கட்டமைத்து வைத்திருக்கிறார்...

விநாயகர் சிலையுடன் சேர்ந்து, மண்பானைகளும், மண் விளக்குகளும் செய்வதில் பாண்டியராஜனை மிஞ்ச ஆள் இல்லை என்கின்றனர் பகுதிவாசிகள்...

ஐந்தாவது தலைமுறையாக, என் அண்ணனின் மகனும் தற்போது படித்துக் கொண்டே விநாயகர் சிலை செய்ய தொடங்கி விட்டதாக பெருமிதம் கொள்கிறார் பாண்டியராஜன்...


Next Story

மேலும் செய்திகள்