"426 காயின்கள்..." கண்களை கவர்ந்த செல்வ விநாயகர்

x

கும்பகோணத்தில் பாலக்கரை, மேலக்காவேரி, தலைமை அஞ்சலக சாலை, செட்டி மண்டபம், மகாமக குளம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் 426 நாணயங்களை கொண்டு உருவான மாடர்ன் ஆர்ட் செல்வ விநாயகர் அனைவரையும் கவர்ந்தார். திருச்சியை சேர்ந்த நாணயவியல் கழக செயலாளர் பத்ம நாராயணன் இதனை உருவாக்கினார்.

திண்டுக்கல்லில் மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் திருக்கோவிலில், 50 பெண்கள் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் சூரிய ஒளிக்கதிர்களை பயன்படுத்தி மரப்பலகையில் விநாயகரின் உருவப்படத்தை, விக்னேஷ் என்ற கலைஞர் வரைந்தார். இந்த ஓவியத்தை வரைய 15 நாட்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்