அருகே நிற்கும்போது திடீரென ஏறும் வெறி... அடுத்த நொடியே ரத்த வேட்டையாடும் - குழந்தைகளை குறிவைக்கும் கொடூர மிருகம் ... மருத்துவமனையில் குவியும் குழந்தைகள்

x

ஊர் ஊராக சென்று கடித்துக் குதறும் வெறிநாயால் கள்ளக்குறிச்சியும், கடலூரும் கதிகலங்கிப் போயிருக்கின்றன... 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர்...இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

சமீப நாட்களாகவே வெறிநாய்க்கடி சம்பவங்கள் தமிழகத்தை அதிரச் செய்துள்ளன...

குழந்தைகளைக் குறி வைக்கும் வெறிநாய்களால் பெற்றோர் பெரும் பீதியில் உள்ளனர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம்... சின்ன சேலம் அருகே உள்ள கிராமம் தான் வி. மாமந்தூர்...தெருக்கூத்து நடந்த சமயம்...கூட்டமாக கூடியிருந்தனர் மக்கள்...அங்கு சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று...திடீரென கூட்டத்தில் இருந்த மக்களைக் கண்மூடித்தனமாக கடித்துக் குதறத் துவங்கியது...

இதில் ஆகியோர் வெறிநாய்க்கடியால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்...

ஒரு கட்டத்தில் வெறிநாயை கிராம மக்கள் விரட்டியடித்துள்ளனர்... அங்கிருந்து நடையாக கிளம்பிய வெறிநாய் கடலூர் மாவட்டம் பனையந்தூர் கிராமத்துக்குள் புகுந்து...குழந்தைகளைக் குறிவைத்து மூர்க்கத்தனமாக துரத்தித் துரத்திக் கடித்துக் குதறியது...

கடிபட்ட குழந்தைகள் அத்தனை பேரும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தான் அதிர்ச்சி...

கை,கால்,முகம் என அனைத்து இடங்களிலும் பலத்த காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இருட்டாக உள்ள நேரத்தில் வெளியில் வருபவர்கள் தான் வெறிநாய்க்குக் குறி...

ஊர் ஊராக சென்று கடித்துக் குதறும் இந்த வெறிநாயால் இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட உள்ளனரோ என இரு ஊர் மக்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்...

அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன்னர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வெறிநாயைப் பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்