பிறந்த 8வது நாளில் வாயில் நுரைதள்ளி துடித்து உயிர் விட்ட குழந்தை...எமன் போல் ரகசியமாக கருவறுத்த அப்பா

x

எருக்கஞ்செடியின் பாலை கொடுத்து, பிறந்து 8 நாள்களேயான ஆன பெண் குழந்தையை கொன்றதாக தந்தை அளித்திருக்கும் வாக்குமூலம் வேலூர் மாவட்டத்தை அதிரச் செய்திருக்கிறது. இதன் முழு பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

பிறந்து 8 நாள்களேயான பெண் குழந்தையின் மர்ம மரணம் வேலூரை உலுக்கி இருந்த நிலையில், தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது...

இந்த விவகாரத்தில், குழந்தையின் மீது மூத்த மகள் தெரியாமல் பெட்ஷீட்டை போர்த்தியதால், மூச்சுத்திணறி குழந்தை இறந்ததாக பெற்றோர் இருவரும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது...

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த பெண் வீட்டார், மருமகன் மீது சந்தேகம் இருப்பதாக கூறி போலீசில் புகாரளித்த நிலையில், குழந்தையின் பெற்றோர் இருவரும் தலைமறைவானது போலீசாரை சந்தேகமடைய செய்தது..

இந்நிலையில், வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், வேலூர் மாவட்டம் பொம்மன்குட்டையை சேர்ந்தவர்களான ஜீவா - டயானா தம்பதியை வலைவீசி தேடி வந்தனர்...

இதனிடயே, குழந்தையின் பிரேத பரிசோதனையில், அதிர்ச்சி காத்திருந்தது..

குழந்தையின் உடலில் எந்தவொரு காயமும் இல்லை என கூறியிருக்கின்றனர் மருத்துவர்கள்... அந்நேரம், தம்பதியின் வீட்டருகே உள்ள பப்பாளி மரமும், எருக்கஞ்செடியும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உடைக்கப்பட்டிருந்த நிலையில், இவற்றின் பாலை குழந்தைக்கு ஊற்றி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்...

இந்நிலையில்தான் அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி செயலாளர் உமாபதி என்பவரின் அடைக்கலத்தில் பதுங்கி இருந்த தம்பதி இருவரையும் போலீசார் பிடித்திருக்கின்றனர்..

இதில், குழந்தையின் தந்தை ஜீவா அளித்த வாக்குமூலம்தான் தற்போது வேலூர் மாவட்டத்தை ஆட்டம் காணச் செய்திருக்கிறது..

ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக ஆண் குழந்தை வேண்டும் என்ற நோக்கில், குழந்தை பிறப்பதற்கு முன்னரே கோவிலில் வேண்டி, ஆடு, கோழிகளை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்த தயாராக இருந்தேன் என கூறியிருக்கிறார்....

இந்நிலையில், பெண் குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி அடைந்த நான், ஆதங்கத்தில் என்ன செய்வது என தெரியாமல் 8 நாள்களாக தவித்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழலில், குழந்தையை மனைவிக்கு தெரியாமல் வெளியே கொண்டு வந்த பிறகு, வீட்டு வாசலில் இருந்த எருங்கஞ்செடியை உடைத்து, அதன் பாலை சாறாக பிழிந்து குழந்தைக்கு ஊற்றி கொன்றதாக பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்...

பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில், மனைவி மற்றும் தன் தாயாருடன் சேர்ந்து பிடிபட்ட ஜீவாவிடம் மேலும் விசாரணை நடத்தி போலீசார், இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஊராட்சி செயலாளர் உமாபதியையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்