உபியில் நடுரோட்டில் ரிப்போட்டர் சுட்டுக் கொலை.. பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்

x

உத்தரபிரதேசத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி நாளிதழில் நிருபராக பணியாற்றி வந்தவர் 35 வயதான ராகவேந்திர பாஜ்பாய் (Raghavendra Bajpai). சித்தாபூரில் உள்ள டெல்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தி, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 3 குண்டுகள் பாய்ந்த நிலையில், சம்பவ இடத்திலேயே ராகவேந்திர பாஜ்பாய் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்