TTF-ஐ பார்த்ததும் நீதிபதி போட்ட 3 கண்டிஷன்கள்.. செய்வாரா வைகுண்ட வாசன்?

x

யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமினில் விடுவிக்கப் பட்டிருக்கிறார். செல்போன் பேசிக் கொண்டே கார் ஓட்டிய சர்ச்சை விவகாரத்தில் கைதான டிடிஎஃப் வாசன், மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதியிடம் வாசன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில், நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.இதுபோன்ற செயலில் இனி ஈடுபடமாட்டேன் என மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட வேண்டும் எனவும், அதனை கடிதமாக நீதிமன்றத்தில் தாகக்ல் செய்ய வேண்டும் எனவும் கூறி டிடிஎஃப் வாசனுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில், 10 நாட்களுக்கு ஆஜராகி வாசன் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்