விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களுக்கு NHல் காத்திருந்த அதிர்ச்சி

x

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால், செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் மறைமலைநகர் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்