காத்திருக்கும் கவுரவம்... - பள்ளிக்கல்வித்துறை அதிரடி | TN Schools

x

10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற ஆயிரத்து 761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை சென்னைக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தப்படும் என்றும், தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்த 43 மாணவர்களும் கவுரவிக்கப்படுவார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி 5 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு சாதனை படைத்த தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் இது போன்ற ஒரு விழா, முதல் முறையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது... தேர்தல் விதிமுறைகள் முடிந்த பிறகு, ஜூன் மாதத்தில் இந்த விழா நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்