வீக் எண்ட் லீவு... மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக போக்குவரத்துக் கழகம் | TN Bus

x

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழன போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை 275 பேருந்துகளும், சனிக்கிழமை 315 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8,739 பயணிகளும் சனிக்கிழமை 3,414 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,107 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். அதேபோன்று பெங்களூரு, ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்