ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றவருக்கு நடந்த சம்பவம்... இப்படியும் நடக்கலாம் ரொம்ப உஷாரா இருங்க

x

ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்றவருக்கு நடந்த சம்பவம்... இப்படியும் நடக்கலாம் ரொம்ப உஷாரா இருங்க

உதவுவது போல நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி, நூதன முறையில் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், தளவாய்பட்டனத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், ஏடிஎம்மில், பணம் எடுப்பதற்காக சென்றார். ஆனால், ஏடிஎம்மில் பணம் வராத நிலையில், அருகே இருந்த நபர் ஒருவர் உதவுவது போல நடித்து, ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துச் சென்றார். பின்னர், சுப்பிரமணியன் வங்கிக் கணக்கிலிருந்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். புகாரின் பேரில், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்