திடீரென அடித்து நொறுக்கிய கனமழை.. EVM எந்திரங்கள் உள்ள அறையில் மின்தடை.. மங்கலாக தெரிந்த CCTV காட்சிகள்

x

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மின்சாரம் தடை பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், மழை பெய்தததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், சிசிடிவி காட்சிகள் மங்கலாக தெரிந்ததால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, தொழில் நுட்பக் குழுவினர் உடனடியாக ஜெனரேட்டர் மூலமாக சரிசெய்து மின்சாரம் வழங்கியதால் இயல்பு நிலை திரும்பியது.


Next Story

மேலும் செய்திகள்