சட்டவிரோதமாக காட்டுப்பகுதியில் விற்கப்படும் மதுபானம்.. திருப்பூர் மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை

x

திருப்பூர் காட்டுப்பகுதியில் மது விற்பனை அமோகமாக நடைபெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு அருகில் உள்ள

காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக அனைத்து வகை மது பாட்டில்களும் டாஸ்மாக் கடை போன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காட்டுப்பகுதியில் விற்கப்படும் இந்த மது வகைகளால், கள்ளச்சாரயத்தை போன்று பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக, சட்டவிரோத மது விற்பனையை கண்காணித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்