குழந்தை இல்லை என கூறி துன்புறுத்திய கணவன், தங்கை.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

x

கோவில்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்டநிலையில், கணவர் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டன்குளத்தை சேர்ந்த ராகுல்- காயத்ரி தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் காயத்ரிக்கு மூன்று வருடமாக குழந்தை இல்லாததால் அதனைக் கூறி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த காயத்திரி தனது பெற்றோருக்கு செல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்பிவிட்டு திடீரென தூக்குப்போட்டு த*கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் காயத்திரியின் கணவரை மட்டும் போலீசார் பிடித்து விசாரித்து வரும்நிலையில், அவரது பெற்றோர் மற்றும் சகோதரியையும் கைது செய்ய வேண்டும் என கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்