பஸ்டாண்டில் ஓப்பனாக கள்ளச்சாராயம் - கூவி கூவி விற்ற நபர் - அதிர்ந்து போன போலீஸ்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில், முதியவர் ஒருவர் பகிரங்கமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு போலீசார் விரைந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் பகிரங்கமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்த போலீசார், அவரிடம் இருந்த 20 பாக்கெட் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த முதியவர் பெயர், கலீல் என்பதும், தமிழக-ஆந்திரா எல்லைப் பகுதியான தேவராஜபுரம் மலைப்பகுதியில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயத்தை, மினி பேருந்து மூலமாக கொண்டுவந்து, அவர் விற்பனை செய்ததும் தெரிய வந்தது...


Next Story

மேலும் செய்திகள்