மது போதையில் நடுரோட்டில் செய்த அட்ராசிட்டி.. தீயாய் பரவும் வைரல் வீடியோ

x

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே, சாலையில் செல்லும் வாகனங்களை தாக்கியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் இருவர் மது போதையில் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மிரட்டல் தொணியில் பேசி இருவரும் அத்துமீறியதை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இருவரும் செங்கல்பட்டு காய்கறி மார்க்கெட்டை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் குறித்தான வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்