முதல்வர், துணை முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி வேண்டும் - பாஜக நிர்வாகி ஆளுநரிடம் மனு

முதல்வர், துணை முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி வேண்டும் - பாஜக நிர்வாகி ஆளுநரிடம் மனு

பாஜக மாநில செயலாளரான அஸ்வத்தாமன், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு ஆளுநரிடம் மனு அளித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரும் துணை முதல்வரும் பிரிவினைவாதம் குறித்து பேசுவதாகவும், மனித வாதம் எப்போது பேச போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் மலையாளிகளின் வாக்குகளை பெறுவதற்காக, ஓணம் பண்டிகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதாகவும் அஸ்வத்தாமன் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்