நூதனமாக திருடிய 2 கிலோ நகை.. பிசிறு தட்டாமல் தட்டி தூக்கிய போலீஸ் | Police | Thanthitn

x

கடையநல்லூர் பேட்டை பகுதியில், ஒரே தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, அக்கம் பக்கத்து கடைகளில் இருந்து நகைகளை வாங்கி வந்து, காண்பித்து விற்பனை செய்வது வழக்கம். நம்பிக்கையின் அடிப்படையில் வியாபாரிகள் நகைகளை, பக்கத்து கடைகளுக்கு கொடுத்து அனுப்புவர். இந்நிலையில், இப்பகுதியில் திமுக பிரமுகரின் மகன் முகம்மது இப்ராஹிம் என்பவரும் நகைக்கடை வைத்துள்ளார். இவர், வாடிக்கையாளரிகளிடம் காண்பித்து வருவதாக, அக்கம்பக்கத்து கடைகளில் 2 கிலோ நகைகளை வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர், கடையை அடைத்துவிட்டு திடீரென தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சக நகை வியாபாரிகள், போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், முகம்மது இப்ராஹிமை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்