"கண்டித்த ஆசிரியர்.." கோபமான பெற்றோர்கள்.. அரசுக்கு வைத்த கோரிக்கை

x

தூத்துக்குடி மேலநம்பியபுரம் கிராமம் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விடுமுறை தினங்களில் கண்மாயில் குளிக்கச் சென்றதாகக் கூறி ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியர் மாணவர்களைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தங்களுடனே மாணவர்கள் கண்மாய்க்கு வந்த நிலையில் அடித்தது ஏன் என பெற்றோர்கள் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டினை தொடர்ந்து கல்வி துறை அதிகாரிகள் பள்ளியில் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் விடுமுறையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்