"பெட்ரூமுக்கு அழைத்த பிரபல தமிழ் நடிகர்" - ஒட்டு மொத்த கோலிவுட்டையும் அதிரவைத்த பிரபல நடிகை

x

பெட்ரூமுக்கு அழைத்த பிரபல தமிழ் நடிகர்" - ஒட்டு மொத்த கோலிவுட்டையும் அதிரவைத்த பிரபல நடிகை

பிரபல தமிழ் நடிகர், தன்னை தகாத உறவுக்கு அழைத்ததாக மலையாள நடிகை ஒருவர் குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம் வெளியிட்ட அறிக்கை, கேரள திரையுலகையே ஸ்தம்பித்திக்க வைத்திருக்கிறது...

கேரளாவில், நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக பாலியல் அத்துமீறலுக்கு ஆளாவதாகவும், இதற்கு காஸ்டிங் கவுச் என்ற பெயரில் நடிகைகளுக்கு கோடு வேர்டும், குறியூடு எண்களும் வழங்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

இந்த அறிக்கைக்கு பின் சில மலையாள நடிகைகள் வெளியில் வந்து தாங்கள் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல் பிரச்சினைகளை பொதுவெளியில் குறிப்பிட்டு பரபரப்பை தகிக்கச் செய்துகொண்டிருந்தனர்..

இதன் விளைவாய் நடிகைகளின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, ஐ.ஜி தலைமையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய 7 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்திருக்கிறது...

இதன் தாக்கம் தமிழகம் வரை எதிரொலித்தது...

கேரளாவை போல தமிழகத்திலும் நடிகைகள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகுவதாக கூறி சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார் நடிகை ஷனம் செட்டி...

இந்நிலையில்தான் பிரபல தமிழ் நடிகர் மீது, மலையாள நடிகை ஒருவர் பாலியல் புகாரளித்திருப்பது தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது...

நடிகர் ரியாஸ்கான் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு படுக்கை அறைக்கு அழைத்ததாகவும், விருப்பம் இல்லையென்றால் தனது தோழிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என கூறியதாகவும் நடிகை ரேவதி சம்பத் குற்றம் சாட்டியிருக்கிறார்...

இதற்கு முன், கேரள மாநில நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், நடிகருமான சித்திக் மீது ரேவதி சம்பத் இதேபோல் பாலியல் புகாரளித்திருந்தார்...

இதையடுத்து பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சித்திக் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது...

தொடர்ந்து, திரையுலகில் இருந்தே நடிகர் சித்திக் விலக வேண்டும் எனவும், கேரள அரசு பாதுகாப்பு அளித்தால் சித்திக் மீது புகாரளிப்பேன் எனவும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த ரேவதி சம்பத், தற்போது நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்